மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலிருந்து ஒதுங்கும் சுகாதார பரிசோதகர்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து நாளை முதல் விலகியிருப்ப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி தொற்றுக்குள்ளாவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தொடர்பு கொண்ட ஒருவர் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.

தன்னை ஆடைத் தாழிற்சாலை ஊழியர் என அடையாளப்படுத்திய அந்த நபரின் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.

அவரது தொலைபேசி இலக்கத்தையும், அடையாளத்தையும் பொலிசாரிடம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...

பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சு உத்தரவு!

மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிப்பதும், எந்த விதமான உடல் அல்லது மனரீதியான...

இயக்கச்சியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்