அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கான ரகசியம் உங்கள் சமையலறையிலேயே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னவென்று புரியவில்லையா? பல பொருட்களின் மதிப்பு தெரியாமலே அதை நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம்.
கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் போக்க வல்லது வெந்தயம். அதை பற்றியும் அதை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வெந்தயத்தின் நன்மைகள்
இந்த வெந்தயம் உங்கள் தலைமுடி கொட்டுவதை இழப்பதை தடுப்பதற்கான ஒரு தீர்வாகும். இது உச்சந்தலைக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது, மேலும் இது விரைவான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க மயிர்க்கால்களை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், கடையில் வாங்கும் கண்டிஷனருக்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
கூடுதலாக, வெந்தயம் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பொடுகு, உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் முகப்பருவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது. மேலும், வெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பதால் பரிந்துரைக்கிறோம், இதனால் முடி மெலிந்து போகாமல் தடுக்க உதவும்.
தலைமுடி வேகமாக வளர வெந்தயத்தை பயன்படுத்துவது எப்படி?
உங்களுக்கு தேவையான விஷயங்கள்: தேங்காய் எண்ணெய் + வெந்தயம்
படிகள்: வெந்தயத்தை ஓரளவு நசுக்கி, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை சூடாக்கவும். அடுத்து அதை வடிகட்டி, சூரிய வெளிச்சம் படும் இடத்தில் ஒரு கண்ணாடி குடுவையில் ஊற்றி குறைந்தபட்சம் 7 நாட்கள் சேமித்து வைக்க வேண்டும்.
இரவிலும், தலை குளிக்க போகும் முன்னும் இந்த வெந்தய எண்ணெய் கலவையுடன் உங்கள் உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்யுங்கள். இதே போல ஒரு வாரம் செய்து வர உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
பொடுகு பிரச்சினை நீங்க வெந்தயம் பயன்படுத்துவது எப்படி?
தயிர், வெந்தயத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயம் மட்டும் இரண்டு மடங்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
வெந்தயத்தை பொடியாக்கி தயிரில் கலக்கவும். மென்மையான பேஸ்ட் ஆக கட்டிகளும் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி நீளமாக இருந்தால் ½ அல்லது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவவும். பின்னர், 40-50 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். நன்கு உலர்ந்த பிறகு உங்கள் ஹேர் மாஸ்கை சிகைக்காய் போட்டு கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
தலையில் ஏற்படும் அரிப்பை போக்க
முதல்நாள் இரவே வெந்தயத்தை நன்கு ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும்.
முட்டை பிடிக்கவில்லை என்றால் அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். பின்னர் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கலாம்.