நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தாவியது; ஆபத்து இல்லை என ஆய்வாளர்கள் தகவல்!

Date:

நாய்கள் மத்தியில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி உலகையே அச்சுறுத்தி வருகிறது. SARS-CoV2 எனப்படும் கொரோனா வைராஸால் கோவிட்-19 நோய் பரவுகிறது. இந்த வகை கொரோனா வைரஸ் போக வேறு சில கொரோனா வைரஸ்களும் உள்ளன. அவற்றால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.

இந்நிலையில், நாய்களிடையே பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு நிமோனியா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேட்பதற்கு ஆபத்தான வைரஸ் போல தெரிந்தாலும், உண்மையிலேயே இந்த கொரோனாவால் ஆபத்து இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். மலேசியாவில் உள்ள சராவக் பகுதியில், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் பற்றி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளர்களுக்கு தெரியும். ஆனால், இவை மனிதர்களுக்கு பரவாமல் இருந்ததால் பேசுபொருளாகவில்லை. இந்நிலையில், தற்போது மனிதர்களுக்கு பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஆபத்து இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்