சீன மீன்களுக்கு அமெரிக்க அரசு தடை!

Date:

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சீனாவை சேர்ந்த நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஊழியர்கள் அடிமை போல நடத்தப்பட்டு சிலர் இறந்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனத்தின் ஊழியர்கள் கொத்தடிமை போல வலுக்கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட கப்பல்களுடன் தொடர்புடைய எல்லா இறக்குமதிக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்த கப்பல்களில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் உடனடியாக நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும்பாலும் டூனா மீன் இறக்குமதி செய்யப்படுகிறது. 2018ஆம் ஆண்டில் தலியனில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியான டூனா மீன்களின் மதுப்பு மட்டும் 20 மில்லியன் டாலர்.

தலியன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தலியன் ஓசன் ஃபிஷிங் நிறுவனம் வலுக்கட்டாயமாக ஊழியர்களை அடிமை போல வைத்து வேலை வாங்குவதாகவும், மோசமான பணிச் சூழலால் சில இந்தோனேசிய மீனவர்கள் கடந்த ஆண்டு இறந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் 30க்கும் மேலான கப்பல்களுடன் தொடர்புடைய கடல் உணவு இறக்குமதிக்கு அமெரிக்க அரசு முழு தடை விதித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்