31.3 C
Jaffna
March 28, 2024
இந்தியா

ஏழுமலையானுக்கு எட்டு வயது சிறுமியுடன் திருமணம்!

ஏழுமலையான் கோவிலில் சிறுமியுடன் சாமிக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் நகரில் அமைந்திருக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது.

ராயதுர்க்கம் பிரசன்ன வெங்கடேஸ்வரர் சுவாமி கோவிலில் இன்று கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக சம்பிரதாயத்தில் இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா ஆகியோரின் மகளான எட்டு வயது மௌனிகா உடன் வெங்கடேஸ்வர சாமிக்கு சம்பிரதாய அடிப்படையில் திருமணம் நடத்தப்பட்டது.

இந்த கோவில் கல்யாண உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடைபெறுவது வழக்கம்.இந்த நிலையில் கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலி கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் தொட்டு, பின்னர் உற்சவரின் திருவடியில் வைத்து ஆசி பெற்று சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.

தொடர்ந்து சிறுமியின் தாய் ஜெயம்மா தன்னுடைய மகள் கழுத்தில் தாலி கட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்யாண உற்சவத்தின் போது மணமகளாக இடம்பெறும் சிறுமிக்கு மிக சிறப்பான இல் வாழ்க்கை அமையும் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment