எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக கடல உயிரியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் காரணமாக மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
green project api என்ற சிங்கள மொழி மூல பேஸ்புக் பக்கத்தில், கப்பலில் இருந்து வெளியேறும் இரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிக்கப்பட்ட மீன்கள் இறந்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் 2 நாளில் கற்பனை செய்ய முடியாதளவு அனர்த்தம் ஏற்படுமென்றும், பல வருடங்களிற்கு இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள எரிபொருள் கடலில் மூழ்கினால் நூற்றுக்கண்கான கிலோமீற்றர் தூரமான கடலை அழிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





