பனை விழுந்து சிறுமி காயம்!

Date:

கடும் காற்று காரணமாக காரைநகரில் பனை மரம் விழுந்து சிறுமியொருவர் காயமடைந்துள்ளார். அவரது வீட்டுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று நேரில் சென்று சேத விபரங்களை ஆராய்ந்தது.

காற்றினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு சுயதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்பு தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றார்கள்.

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தலைமையில் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நேற்றைய தினம் காரைநகர் பகுதியில் காற்றின் தாக்கத்தினால் பனைமரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் வீட்டுக்கு விஜயம் மேற்கொண்டு சேதமடைந்த வீட்டுக்கு தற்காலிக கூரை விரிப்பினை வழங்கி வைத்ததோடு பாதிப்புக்குரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கான விபரங்களையும் சேகரித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்