வாகனங்களில் வந்தால் வவுனியாவிற்குள் நுழைய முடியாது!

Date:

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மூலமாக நகருக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிசார், அவசியத்தேவை கருதி மோட்டார் சைக்கிள்களில் செல்வோரைத்தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பயணிக்கும் அனைவரையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரில் அத்தியவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், போன்றவை திறந்திருப்பதுடன் ஏனைய வியாபாரநிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்