Pagetamil
இந்தியா

கொரோனா விதிகளை மீறி திருமணம்; விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் ஆணை!

கொரோனா இரண்டாம் அலை சூறாவளியை போன்று வீசி வரும் சூழலில் கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளள்து. இறப்பு, திருமணம் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கும் இ- பதிவு கட்டாயம் என்று அரசின் உத்தரவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு அமலாகுவதற்கு முன்னரே பல மாவட்டங்களில் அவரச திருமணங்கள் நடைபெற்றதை செய்திகள் வாயிலாக காண முடிந்தது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நிலத்தில் தான், வானத்தில் அல்ல என்பதாக நினைத்துக்கொண்டு மதுரை ஜோடி ஒன்று பறக்கும் விமானத்தில் உறவினர்கள் 100 பேருக்கு மத்தியில் சரீர இடைவெளியின்றி திருமணம் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மதுரையை சேர்ந்த ராகேஷ் – தீக்‌ஷனா தம்பதியினர் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் உறவினர்களுடன் பயணித்தனர். விமான பயணம் என்பதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது உறவினர்கள் முன்பு மணப்பெண் தீக்‌ஷனாவுக்கு மணமகன் ராகேஷ் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு விமானத்தில் நடந்தாலும் சரீர இடைவெளியின்றியும், மணமக்கள், உறவினர்கள் யாரும் முகமூடி அணிந்துகொள்ளாமலும் திருமணத்தை நடத்தினர்.

எனவே கொரோனா விதிகளை மீறி சுமார் 100 பேருடன் திருமணம் நடைபெற்றதை குறித்து விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் ஆணையிட்டுள்ளது. மேலும், விமான விதிப்படி விமான ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment