29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

மூலிகை இலை முகக்கவசம்; இணையத்தில் வைரலாகும் சன்னியாசி!

உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முககவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரசின் இரண்டாவது அலையால் உத்தரபிரதேச மாநிலத்தில் தினசரி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிலர் சொந்த நகைச்சுவையான காரியங்களை செய்கிறார்கள். இந்நிலையில் சித்தாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூகாது பாபா என்ற சன்னியாசி நூலால் சுற்றப்பட்ட முககவசத்தை அணிந்துள்ளார். அதனுள் வேப்பிலை மற்றும் துளசி இலையை வைத்து அதனை தனது முகத்தில் முககவசமாக அணிந்துள்ளார்.

மருத்துவக் குணம் வாய்ந்த இரு இலைகளையும் வைத்து தானே இந்த முகக்கவசத்தை உருவாக்கியதாக ஜூகாது பாபா தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா தனது ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில், உத்தரபிரதேசத்தின் சித்தாப்பூரை சேர்ந்த ஒரு முதியவர் வேப்பம் மற்றும் துளசி இலைகள் நிரப்பப்பட்ட முகமூடியை அணிந்திருப்பதைக் காணலாம். இந்த முகமூடி உதவும் என்று உறுதியாக தெரியவில்லை என கூறி உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment