கிளிநொச்சியில் நீரில் மிதக்கும் இளைஞனின் சடலம்: நடந்தது என்ன?

Date:

கிளிநொச்சி டீ3 கோவிந்தன் கடைச் சந்தி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக அடையாளம் காணப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு வில்சன் வீதியை சேர்ந்த கே.ரமேஸ்குமார் (30) எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டவர் எனவும், நேற்று (24) மாலை குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்திசாலைக்கு அனுப்பபடவுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...

பேருந்து விபத்தில் 34 பாடசாலை மாணவர்கள் காயம்!

பொகவந்தலாவ, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று...

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய மனைவி, மச்சான் மீது கணவன் கத்திக்குத்து!

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்