மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற அதிபருக்கு அபராதம்!

Date:

பொது நிகழ்ச்சியில் மாஸ்க் போடாத பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காலத்துக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சில நாடுகளில் ஆட்சியாளர்களே இவ்விதிமுறைகளை மதிப்பதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

உதாரணமாக, முன்னாள் அமெரிக்க அதிபர் மாஸ்க் அணிவதில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதேபோல, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவும் மாஸ்க் அணிவதில்லை என விமர்சிக்கப்பட்டார். முன்பு இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள மாரன்ஹாவோ மாகாணத்தில் ஒரே இடத்தில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும், மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21, மாரன்ஹாவோவில் உள்ள அகைலாண்டியா பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிபர் போல்சனாரோ பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் மாஸ்க் அணியாமல் இருந்தார். மேலும், மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், மாஸ்க் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றதற்காக அதிபர் ஜேர் போல்சனாரோவுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக மாரன்ஹாவோ ஆளுநர் ஃப்ளாவி டினோ தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்