Pagetamil
இலங்கை

பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை தம்பகாமம் இன்நாசி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை (23) மீட்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சகோதரரால், பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டதாக பளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

பெண்ணின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணைகள் நிறைவடைந்தபின் பிரேத பரிசோதனை மற்றும்
பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பதவுள்ளதாக பளை பொலீசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!