வவுனியாவில் இளவயதினரிடையே அதிகளவில் தொற்று!

Date:

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஜனவரிமாதம் முதல் மே.20 வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளவயதினை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 544 பேரும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 54பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும், செட்டிகுளம் பிரிவில் 34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 19 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும், 31-40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்குமேற்ப்பட்ட 197 தொற்றாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் ஒருவரும், இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 6 பேர் என மொத்தம் 7 பேர் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்