வடமாகாணத்தில் இன்று 80 கொரொனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
யாழ் போதனா வைத்தியாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீடங்களில் இன்று 233 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில் 41 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 25 பேரும், வவுனியா மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 2 பேர்,
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும்,
வவுனியா பொது வைத்தியசாலையில் 6 பேரும்,
கிளிநொச்சி, கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், தர்மபுரம் வைத்தியசாலை 2 பேர், பளை வைத்தியசாலை ஒருவர், பூநகரி வைத்தியசாலை ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,
யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 4 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 7 பேர், மானிப்பாய் வைத்தியசாலையில் 3 பேர், சங்கானை வைத்தியசாலையில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் (காக்கைதீவு மீன்சந்தையில் எழுமாற்றாக நடந்த பரிசோதனையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர்), சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (இதில் 3 பேர் ஆயுர்வேத வைத்தியசாலை பணியாளர்கள்), யாழ் சிறைசசாலை கைதிகள் 4 பேர் தொற்றிற்கள்ளாகினர்.




