கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பரவிய காட்டுத்தீ!

Date:

கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பெலொபென்னீஸ் தீபகற்பம் அமைந்துள்ளது. அங்குள்ள கோரிந்த் வளைகுடா பகுதி காடுகள் அடர்ந்த பகுதி ஆகும். அந்த காட்டுப் பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியது.

கிரேக்க தலைநகர் ஏதென்ஸ், இந்த பகுதியில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வேகமாக வீசிய காற்றுடன் சேர்ந்த இந்த காட்டுத்தீயானது கோரிந்த் பகுதியில் இருந்து மேற்கு அட்டிகா பகுதியில் உள்ள காடுகள் வரை பரவியது. தீ பரவிய இடங்களுக்கு அருகில் இருக்கும் 6 கிராமங்கள், 2 பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக ஏற்பட்ட புகை மண்டலம் ஏதென்ஸ் நகர் வரை பரவியுள்ளது.

பல கடற்கரை ரிசார்ட்டுகளும், சுற்றுலா விடுதிகளும் இந்த தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் 180 தீயணைப்பு வீரர்கள், 62 தீயணைப்பு வண்டிகள், 17 விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்