மட்டக்களப்பு கிரான் கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை இருவரையும் கல்குடா பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபருக்கு வாழைச்சேனை நீதி மன்றினால் நினைவேந்தல் தடையுத்தரவும் பெறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று அஞ்சலி செலுத்தினார். கிரான் கடற்கரையில் தனது காணி பகுதியில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் கைதானார்.
கைதான விமலசேன லவக்குமார், அண்மையில் தனது சொந்த காணியை கிரான் பகுதியில் அண்மையில் காணியற்றவர்களுக்கு இலவசமாக பிரித்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



