‘கொலை பண்ணிடுவேனு மிரட்டுனாங்க’ டூ பிளஸி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Date:

உலகக் கோப்பையில் நியூசிலாந்து எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு என ஃபாஃப் டூ பிளஸி தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால் இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 222 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த எளிய இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணி வெறும் 170/10 ரன்கள் மட்டும் அடித்து 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில்
ஃபாஃப் டூ பிளஸி 43 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இப்போட்டி முடிந்தவுடன் தோல்வியடைந்த சோகத்தில் நாடு திரும்பிய டூ பிளஸிக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை டூ பிளஸி அப்போது பெரிதாக எடுக்கக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ளார்.

Faf du Plessis: 'கொலை பண்ணிடுவேனு மிரட்டுனாங்க' டூ பிளஸி வெளியிட்ட  அதிர்ச்சி தகவல்! - me and my wife recieved death threats after loss the  match against nz in 2011 wc says du plessis | Samayam Tamil

“நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு எனக்கும் எனது மனைவி இமாரி விஸ்ஸருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. ஆனால், இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டோம். வெளி உலக தொடர்பு இல்லாமல்தான் சில நாட்கள் இருந்தோம். பிறகு நிலைமைகள் சீரானது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய டூ பிளஸி, “எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போல் மற்ற வீரர்களுக்கும் மிரட்டல் விடுத்திருக்கலாம். அதுகுறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது. நான் அந்த சமயத்தில் எனது குடும்பத்துடன் வெளி உலக தொடர்பு இல்லாமல் தனியாக இருந்தோம்” எனத் தெரிவித்தார்.

அப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 27.4 ஓவர்கள் முடிவில் 121/4 என இருந்தபோது டூ பிளஸி களமிறங்கினார். கடைசியாக டுமினி 12 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்திருந்தார். இதனால், டூ பிளஸி நெருக்கடியுடன் விளையாட வேண்டிய நிலை இருந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டூ பிளஸி, 35 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்முனை பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ் எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனார். இதற்கு டூ பிளஸிதான் காரணம் என ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். தொடர்ந்து டூ பிளஸியும் 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்ததால் டூ பிளஸி மீது கோபம் மேலும் அதிகரித்தது. அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே அடித்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணி படுதோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்