யாழ்ப்பாண பல்கலைகழக அஞ்சலி எதிரொலி: பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் பொலிசாரின் பிடியில்!

Date:

யாழ்ப்பாண பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொல்சாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை யாழ்ப்பாண பல்கலைகழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் மாணவர்கள் விளக்கேற்றி அஞ்சலி செய்ததை தொடர்ந்து, அதற்கு ஏன் அனுமதித்தீர்கள் என குறிப்பிட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்காமல் இன்று காலை முதல் ஏராளம் இராணுவம், பொலிசார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

எனினும், மாணவர்கள் யாரும் அஞ்சலிக்கு வரவில்லை.

இதையடுத்து, பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விலகி சென்றனர். அத்துடன், மாணவர்களை அஞ்சலிக்கு அனுமதிக்கக்கூடாதென்றும் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு படங்கள் வெளியாகியிருந்தன.  இதையடுத்து, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் பொலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்