28.3 C
Jaffna
April 28, 2024
குற்றம்

வவுனியா இளைஞர்கள் கசிப்பு வேட்டை!

வவுனியாவின் எல்லைப்பகுதியான கல்மடு கண்டல்வேலி குளப்பகுதியில் கசிப்பு உற்ப்பத்தி செய்யும் இடம் இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவரும் நிலையில் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் ஏற்ப்பட்டுவந்ததுடன், அதனால் நேற்றயதினம் இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இதனையடுத்து நேற்றயதினம் இரவு குறித்த பகுதியில் ஒன்றுகூடிய கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கசிப்பு உற்பத்திசெய்யும் இடத்தினை முற்றுகையிட்டதுடன், ஐந்திற்கும் மேற்பட்ட கசிப்பு பெரல்களை மீட்டுள்ளனர்.

எனினும் கசிப்பினை உற்பத்திசெய்த நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விஐயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் செயலாளர் அ.அலெக்ஸ்(சுகேந்திரன்), மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் குறித்த கிராமத்திற்கு இன்று விஐயம் செய்து இளைஞர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளையும் நண்பியையும் வல்லுறவுக்குள்ளாக்கியவர் கைது!

Pagetamil

அடங்க மறுக்கும் யாழ்ப்பாண போதைப்பையன்: 3வது முறையாக பெருந்தொகை மாத்திரைகளுடன் கைது!

Pagetamil

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்

Pagetamil

யாழ் நகரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 4 அழகிகள், உரிமையாளர் கைது!

Pagetamil

மன்னாரில் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment