29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

மன்னாரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர்.

-மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14கிலோ 175 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி மற்றும் பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்த் தலைமையிலான குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment