வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் விழா: படைத்தரப்பின் கண்காணிப்பில் நடந்தது! (PHOTOS)

Date:

Covid 19 சூழல் காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கலுக்கு உப்புநீரில் விளக்கேற்றுவதற்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு பலத்த இராணுவ பொலிஸ் பிரசன்னத்துடன் கட்டுப்பாடுகளுடன் இடம்பெறுள்ளது.

வருடந்தோறும் முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலிலிருந்து நடையாக சிலவத்தை தீர்த்த கரைக்கு சென்று கடலில் உப்புநீரில் விளக்கேற்றுவதற்க்காக தீர்த்தம் எடுப்பது வழமை ஆனால் இவ்வருடம் அவ்வாறு அல்லாமல் மட்டுபடுத்தபட்டவர்கள் மாத்திரம் தீர்த்தம் எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்டு உளவியந்திரத்தில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இந்த தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இராணுவம் ,பொலிஸ் பிரசன்னமாகியிருந்தனர் . வீதிகள் தோறும் மக்கள் கும்பங்கள் வைத்து தேங்காய் உடைக்க இராணுவம் ,பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.

இன்றிலிருந்து எதிர்வரும் 24.05 திங்கள் வரை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் உப்புநீரில் விளக்கெரியும் அதிசயம் இடம்பெற்று 24 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் இடம்பெறவுள்ளது.

Covid 19 பரவல் காரணமாக இம்முறை வைகாசி விசாக பொங்கலுக்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு சடங்குகள் பூசைகள் மட்டும் இடம்பெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்