இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ‘உயிர் குமிழி’ (Bio Bubble) முறை மூலம் நாட்டிற்குள் சுற்றுப்பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, பாதுகாப்பான ‘உயிர் குமிழி’முறையில் மாகாணங்களிற்கிடையிலும் பயணம் செய்யலாம்.
சுற்றுலா பயணிகளை அழைத்து வரவுள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் பாதுகாப்பாக சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.




