கங்கை நதியில் சடலங்கள் மிதக்கும் அவலம் : வலைகள் அமைத்து சடலங்களை கைப்பற்றும் பீகார்!

Date:

பாட்னா: கங்கை நதியில் மிதந்து வரும் மனித சடலங்களை கைப்பற்ற வலைகள் அமைத்து கரையோரம் கடலங்கள் அடக்கம் செய்யப்படுகிறது.

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் கங்கை நதியில் கடந்த 10ம் தேதி 71 உடல்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த அரசு அதிகாரிகள் உடல்களை கைபற்றி அடக்கம் செய்தனர். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று பீகார் மாநில அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உடல்கள் அனைத்தும் ஏறக்குறைய 5 முதல் 7 நாட்கள் வரை தண்ணீரில் மிதந்து வந்திருக்க வேண்டும்.

இவை உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி போன்ற நகரங்களில் இருந்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய போதிய பண வசதி போன்றவை இல்லாதவர்கள் இவ்வாறு கங்கை நதியில் உடல்களை தூக்கி வீசியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கங்கை நதியில் 71 உடல்கள் மிதந்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வலைகளை அதிகாரிகள் அமைத்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து கங்கை நதியில் வீசப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்ற கங்கை நதியில் பல்வேறு இடங்களில் இந்த வலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பீகார் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிலாபம் விடுதியில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வெளிநாட்டவர் கைது!

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து, இணையம் வழியாகப் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டிருந்த...

அமெரிக்காவின் 48 மணித்தியால போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

48 மணி நேர போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துவிட்டதாக, ஈரானின்...

ஈரானால் அடுத்தடுத்து குறிவைக்கப்படும் அமெரிக்க விமானங்கள்!

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்