ஒரே வீட்டில் 50 பாம்புகள் ; அச்சத்தில் மக்கள்!

Date:

உ.பி மாநிலத்தில் ஒரே வீட்டில் 50 பாம்புகள் கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பல பாம்புகள் வந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் கயா பிரசாதா தனது வீட்டில் நேற்று சில குட்டி பாம்புகளை கண்டதாகவும் அவற்றை வயல்களில் விட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவரது வீட்டில் இருந்து பாம்புகள் வரத் தொடங்கியுள்ளன. பின்னர் கிராமவாசிகள் அப்பகுதியில் குவிந்தனர். பின்னர் பாம்பாட்டி ஒருவரை அழைத்துவந்து பாம்புகளை பிடித்துள்ளனர்.

பிறகு பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன. இதுகுறித்து கயா பிரசாத், “இதுவரை 50க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வெளியே விட்டுள்ளோம். வீட்டில் பாம்பை பார்ப்பது வழக்கம்தான். ஆனால் ஒரே நேரத்தில் இத்தனை பாம்புகளை பார்த்ததே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே வீட்டில் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் மீரட் மாவட்டத்தில் ஒரே வீட்டில் 150 பாம்புகள் இருந்தது நினைவுகூரத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

குற்றம் செய்யவே கனடா வரும் வெளிநாட்டு கும்பல்: 46 பேர் கைது, 26 லட்சம் டாலர் மோசடி!

கனடாவில் ‘குற்றவியல் சுற்றுலா’ கும்பல் அம்பலம்: 46 பேர் கைது, 164...

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர்...

மக்கள் வங்கிக்கொள்ளை: உதவி மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

சமீபத்தில் ஹொரனவில் உள்ள ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ. 35...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்