25.1 C
Jaffna
February 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கில் 79 பேருக்கு தொற்று: தையிட்டியில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு தொற்று!

வடமாகாணத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் யாழ் மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் தையிட்டி பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 21 பேரும், நெல்லியடி சுபாஸ் பேக்கரியில் 11 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இன்று வடமாகாணத்தில் 644 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில் 52 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். தையிட்டி திருமண நிகழ்வில் கலந்து கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், நெல்லியடி சுபாஸ் பேக்கரியில் 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 6 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் 5 பேர், தெல்லிப்பளையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment