கிளிநொச்சியில் 12 வயது சிறுவன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

Date:

அயலவர்களால் கூரிய ஆயுதத்தால் 12 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேலியை சீர் செய்வதற்காக சென்ற சிறுவன் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும், கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டமையால் சத்திர சிகிச்சை கூடத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் 119 எனும் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டும் பொலிசார் விசாரணை மெற்கொள்ள தவறியுள்ளதாகவும், இன்று (13) காலை 11 மணியளவிலேயே ஆரம்ப விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் அலட்சியமாக பொலிசார் செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 12 வயதுடைய தர்சிகன் என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்கள விசாரணைகளை மேற்கொண்டு, தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி பெற்று தரவேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்