யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாணங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர்/ கடை உரிமையாளர்களுக்கான அறிவித்தல்.
இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ்குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வது/பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள் /கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில்ஒப்படைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி பெற்றுத் தரப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கும்/ லொறி உரிமையாளர் பொதிகள் போக்கு வரத்தில் ஈடுபடு வோருக்குதெரியப்படுத்துகின்றோம்.
ஆகையால் விரைவாக படிவங்களை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்ப டைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இத்தகவலை இந்த சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
-யாழ் வணிகர் கழகம்-