மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி; ப்ரொமோ வீடியோ வைரல்!

Date:

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கும் மாஸ்டர் ஷெஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். ஆனால் குக் வித் கோமாளி ரசிகர்களோ கடுப்பாகியுள்ளனர்.

ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பா, வில்லன், குணச்சித்திர கதபாத்திரம், கௌரவத் தோற்றம் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி செய்த வில்லத்தனம் அனைவருக்கும் பிடித்துவிட்டது.

அந்த படத்திற்கு பிறகு வில்லனாக நடிக்குமாறு பலரும் விஜய் சேதுபதியை அணுகி வருகிறார்கள். இப்படி படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு படுபிசியாக இருக்கும் விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்.

மாஸ்டர் ஷெஃப் என்கிற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். அந்த நிகழ்ச்சி விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறார்களாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இந்த மாஸ்டர் ஷெஃப் தூக்கி சாப்பிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டனர்.

அடேங்கப்பா, டிவி நிகழ்ச்சிக்கே ஹெலிகாப்டரில் பறந்து வருகிறாரே விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் வியந்து போயிருக்கிறார்கள். ஆனால் என்ன தான் செய்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது என்று அந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை வைத்து குக் வித் கோமாளியை காலி பண்ண முடியாது என்கிறார்கள். அதை பார்த்த மற்றவர்களோ, இது ஒன்றும் குக் வித் கோமாளி போன்று காமெடி நிகழ்ச்சி அல்ல மாறாக சர்வதேச தரத்துடன் வரப் போகும் சீரியஸான சமையல் நிகழ்ச்சி.

உண்மை தெரியாமல் சும்மா கூவ வேண்டாம் என்கிறார்கள். இது தொடர்பாக ட்விட்டரில் ஒரு பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அது எப்படிப்பட்டது என்பது தெரியப் போகிறது. அதுவரை சண்டை வேண்டாமே பாஸுகளா

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்