யாழில் 36 தொற்றாளர்கள்: வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று 37 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (10) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 778 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் 36 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 2 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேர் (இவர்களில் பண்டத்தரிப்பு கிராமிய சித்த வைத்திய நிலைய வைத்தியர், தாதியர், பணியாளர் என மூவர்), கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் (ஒருவர் நெல்லியடி சுபாஸ் பேக்கரி பணியாளர். எழுமாற்றான சோதனையில் தொற்று உறுதியானது. மற்றையவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பியவர்), யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர் (ஏற்கனவே தொற்றிற்குள்ளானவர்களுடன் முதல்நிலை தொடர்பிலிருந்த 18 பேர், எழுமாற்றான சோதனையில் 4 பேர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்