சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Date:

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில் ஈடு​பட்​டனர்.

இந்​நிலை​யில், ரூ.200 கோடி அளவுக்கு மோசடி செய்​த​தாக டெல்லி போலீ​ஸார் சுகேஷ் மீது பதிவு செய்த வழக்கை அடிப்​படை​யாக வைத்து அமலாக்​கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்​தது. மோசடி பணத்​தில் தனது காதலி​யும், பாலிவுட் நடிகை​யு​மான ஜாக்​குலின் பெர்​னான்​டஸுக்கு விலை உயர்ந்த பொருட்​களை சுகேஷ் சந்​திர சேகர் பரிசளித்​துள்​ளார். இதனால் இந்த வழக்​கில் மொத்​தம் 23 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் தான் அப்​ரூவர் ஆக விரும்​புவ​தாக நடிகை ஜாக்​குலின் டெல்லி நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​தார். இதற்கு அமலாக்​கத் துறை எதிர்ப்பு தெரி​வித்​தது. இந்​நிலை​யில், சுகேஷ் சந்​திர சேகர் நடிகை ஜாக்குலின் உட்பட 22 பேர் மீது மகா​ராஷ்டிர குற்​ற​வியல் சட்​டத்​தின் கீழ் குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்ய டெல்லி பட்​டி​யாலா சிறப்பு நீதி​மன்ற நீதிபதி பிர​சாந்த் சர்மா நேற்று உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அவர்​கள் மீது குற்​றச்​சாட்டு பதிவு செய்ய ஜுன் 3-ம் தேதி ஆஜராகும்​படி டெல்லி நீதி​மன்​றம் சம்​மன்​ அனுப்​பியுள்​ளது.

spot_imgspot_img

More like this
Related

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்