26.4 C
Jaffna
March 29, 2024
இந்தியா

இன்று முதல் பொது முடக்கம் : தடையை மீறுபவர்களுக்கு காத்திருக்கும் கடும் தண்டனை!

கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், தடைகளை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24ம் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அவசர தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியேவர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, நகரின் எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாகனங்களில் முகக்கவசமின்றி வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தும், அபராதமும் விதித்து வருகின்றனர். ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி உட்பட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment