கிழக்கில் வேகமாக பரவும் கொரனா மூன்றாவது அலை: கிழக்கு மாகாண பணிப்பாளர்!

Date:

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று (09) தெரிவித்தார்.

கடந்த 24 மணி கிழக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அம்பாறை – தெஹியத்தகண்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,804 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,229 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,520 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 959 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 5,512 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்களப்பு, உகன, களுவாங்சிக்குடிய, கிண்ணியா ஆகிய 07 வைத்தியதிகாரி பிரிவுகள் மிக அவதானத்திற்குரிய வலயங்களாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 29,110 பேருக்கும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 10,775 பேருக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 22,838 பேருக்கும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 21,809 பேருமாக மொத்தம் 84 ஆயிரத்தி 532 பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது வது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 940 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 248 பேரும், அம்பாறையில் 614 பேரும், கல்முனையில் 37 பேருமாக மொத்தம் 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2வது கொரோனாத் தொற்று அலையில் 26 பேரும், 3வது கொரோனாத் தொற்று அலையில் 23 பேருமாக மொத்தம் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் புதிதாக 1,500 படுக்கைகளைக் கொண்ட 04 சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்