மன்னாரில் மகளிர் இல்லத்தில் மின்னல் தாக்கம்!

Date:

மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின் மீது நேற்று (7) வெள்ளிக்கிழமை மாலை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளன.

இதன் போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.

எனினும் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது.இந்த நிலையிலே குறித்த இல்லத்தின் மீது குறித்த அனார்த்தம் ஏற்பட்டது.

உடனடியாக குறித்த இல்லத்தில் உள்ள சிறுமிகள், பாடசாலை மாணவிகள் வெளியேற்றப்பட்டு அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,விரைந்து வந்த மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்