பிரேசிலில் பொலீஸார் துப்பாக்கிச் சூடு: போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 25 பேர் பலி!

Date:

பிரேசிலில் பொலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலியாகினர்.இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த கடத்தல் கும்பலின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸார் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவில் பொலீஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அதிகம் பேர் பலியானது இந்த சம்பவத்தில்தான்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலீஸாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான குழு கடத்தல் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.பிரேசிலில் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்