கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தனியாரால் அனைத்து வகை உரங்களும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தல் விவசாய உள்ளீடுகள் மற்றும் உரம் கிருமி நாசினி விற்பனை செய்யும் வியாபாரிகள் பலர் உரங்களை பதுக்கிய நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிகரித்த விலையில் விற்பனை செய்வதாகவும், விற்பனை செய்கின்ற போது அதற்கான பற்றுச் சிட்டை வழங்கப்படுதில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து வகையான உரங்களும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கும் விவசாயிகள் இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம்
செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்




