நாட்டில் நேற்று 1,895 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 119,424 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று கண்டறியப்பட்டவர்களில் 1,851 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 44 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது நாடு முழுவதும் 17,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 810 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100,885 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,052 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.




