உலக சுகாதார நிறுவன தலைவர்- ஜனாதிபதி கலந்துரையாடல்!

Date:

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இலங்கைக்கு தேவைப்படும் 6 இலட்சம் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவன தலைவருடன் சூம் தொழிநுட்பம் மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டதை தொடர்ந்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாவது டோஸை பெற்றுக் கொடுப்பதற்காக உலகளாவிய ரீதியில் 20 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான தேவை நிலவுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, சீனாவின் சினோ ஃபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த இன்னும் 2 – 3 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது கையிருப்பில் உள்ள 6 இலட்சம் சினோ ஃபார்ம் தடுப்பூசிகளை கொண்டு இலங்கை மக்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொவிட் முதல் அலையினை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு தனது பாராட்டுக்களை உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்தாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மற்றும் கொழும்பு அலுவலகத்தின் பணிகளுக்கு தனது பாராட்டுக்களை பதிவு செய்ததாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்