கொரோனா என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தெரிவித்ததோடு, இதற்காக சிக்கலில் உள்ள நாடுகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவதை உதவி என்று குறிப்பிடப்படுவதை இந்தியா நட்பு என்று குறிப்பிட விரும்புவதாகக் கூறினார்.
“மருந்துகள் என்று வந்தபோது, நாங்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளுக்கு எச்.சி.யூ.யைக் கொடுத்தோம். சில நாடுகளுக்கு நாங்கள் தடுப்பூசிகளைக் கொடுத்தோம். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதை உதவி என்று விவரிக்கிறதை நாங்கள் நட்பு என்று அழைக்கிறோம்” என்று ஜெய்சங்கர் கூறினார்.
கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சி தேவை என்றும், கடந்த காலங்களில், அந்த உலகளாவிய முயற்சிக்கு இந்தியா பங்களித்ததாகவும் ஜெய்சங்கர் மேலும் கூறினார்.
இதுபோன்ற காலங்களில் சர்வதேச கூட்டாண்மை நடைமுறைக்கு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். முன்னதாக நேற்று, ஆண்டனி பிளிங்கனுடனான தனது சந்திப்பு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தடுப்பூசி மூலம் தீர்வுகளை மையமாகக் கொண்டிருந்தது என்பதை விரிவாகக் கூறினார்.
கொரோனாவின் இரண்டாவது மற்றும் கடுமையான அலைகளை இந்தியா எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்து உதவி அதிக அளவில் வரும் நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் இதர கொரோனா தொடர்பான உதவிப் பொருட்களை பல நாடுகளும் இந்தியாவுக்கு தாராளமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




