காலி பூசா கடற்படை முகாமில் ஒரு இடைநிலை COVID-19 சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 12 விடுதிகள் மற்றும் 162 படுக்கைகள் அங்கு உள்ளன.
கடற்படையின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் நான்கு மாடி கட்டிடம் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.
மையத்தில் 12 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அலகும் உள்ளது.
COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை மையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.




