வடமாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று வட மாகாணத்தில் 721 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கொடிகாமம் இலங்கை வங்கி ஊழியர், சாவகச்சேரி பிரதேசசபை உத்தியோகத்தர்கள் 3 பேர், கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலைய ஊழியர்கள் 12 பேர், கைதடியிலுள்ள வடமாகாணசபை பிரதம செயலாளர் அலுவலகத்தில் ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியிலுள்ள 4 பேர், தெல்லிப்பளை விடுதி நோயாளர்கள் 2 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 2 பேர், அச்சுவேலி வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளர் ஒருவர், யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை நிலையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்
வவுனியா வைத்தியசாலை விடுதி நோயாளர்கள் 4 பேர், வவுனியா சுகாதார சேவைகள் பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில், தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர், பல்கலைகழக மாணவன், வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர் ஆகியோர் தொற்றிற்குள்ளாகினர்.




