கொத்துக் கொத்தாக செத்து மடிந்த மீன்கள்; பதறவைக்கும் அதிர்ச்சி பின்னணி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள லித்தானி நதிக் கரை அருகே உள்ள ஏரியில் கொத்துக் கொத்தாக ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அருகே கிராமம் துர்நாற்றத்தால் சூழ்ந்துள்ளது.

மீன்கள் இறந்ததற்கு தண்ணீர் மாசுபாடுதான் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏரிக் கரையில் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீன்களை தன்னார்வலர்கள் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

கழிவுநீரால் தண்ணீர் மாசுபாடு அதிகரித்து வருவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக எச்சரிந்து வந்தனர். இந்நிலையில், மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் அகற்றப்பட்ட இடங்களில் ஏராளமாக குப்பைகளும் கிடக்கின்றன. இதுபோக, பூச்சிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. ஏற்கெனவே மாசுபட்ட் அழுக்கு நீரில் மீன்கள் அழுகிக் கொண்டிருப்பது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாட்களிலேயே 40 லட்சம் மீன்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் குறித்து லித்தானி நீர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்