கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை;பின்தங்கிய காங்கிரஸ்,பாஜக கூட்டணிகள்..!

Date:

தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவிலும் ஏப்ரல் 6’ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் முதல் ரவுண்ட் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் இடது முன்னணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கேரளாவில் தற்போதைய ஆளும் இடது முன்னணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 6’ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் மாநில முதல்வர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மெட்ரோ மேன் ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம், மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முதல் ரவுண்ட் முடிவில் ஆளும் இடது முன்னணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.இடது ஜனநாயக முன்னணி 80 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக கூட்டணி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் கேரளாவில் வெறும் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்