இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை: அதகளம் பண்ணும் அவுஸ்திரேலியா!

Date:

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 இலட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான தகவலில் 24 மணி நேரத்தில் 4 இலட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 இலட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்திற்கு தடை வித்தித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவுடனான அனைத்து வகை போக்குவரத்தையும் அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வசித்து வரும் அவுஸ்திரேலியர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை வித்துள்ளது. மேலும், அவ்வாறு தடையை மீறி இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிமக்களுக்கும் இந்த விதிமுறை பொறுத்தும்.

மேலும், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியர்கள் மற்றும் பிற நாட்டினர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹீர் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்