கார்னிவாக்-கோவ் எனும் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விவசாய கண்காணிப்புக் குழு ரோசல்கோஸ்னாட்ஸர் அறிவித்துள்ளது.
17,000 டோஸின் முதல் தொகுதி ரோசல்கோஸ்னாட்ஸரின் துணை நிறுவனமான ஃபெடரல் சென்டர் ஆஃப் அனிமல் ஹெல்த் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு அதிக உள்நாட்டு தேவை உள்ளது மற்றும் முதல் தொகுதி அளவு நாட்டிற்குள் விநியோகிக்கப்படும் என்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளன என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறன் இப்போது மாதத்திற்கு 3 மில்லியன் டோஸ் ஆக உள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் 5 மில்லியனாக அதிகரிக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் ரோசல்கோஸ்னாட்ஸரின் தலைவரின் ஆலோசகரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில், தடுப்பூசியை விரைவாக பதிவு செய்ய ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ரோசல்கோஸ்நாட்ஸர் மார்ச் 31 அன்று கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.