வடக்கின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Date:

வட மாகாணத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீடத்தில் 454 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தலா 7 பேரும், மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா 4 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும தொற்றிற்குள்ளாகியுள்ளதாக வடக்கு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில்- திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, யாழ் பேதனா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர்,
வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா வர்த்தகர்களிடம் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர், வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் 2 பேரும், பூவசரங்குளம் வைத்தியசாலையில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்