இந்துக்களின் சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி ரத்து.;உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

Date:

கொரோனா நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையை இடைநிறுத்த உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு கோவில்களின் பூசாரிகள் மட்டுமே சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் கூறினார். இந்த யாத்திரை மே 14 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு யாத்திரை செல்லும் நிகழ்வாகும்.இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ளன.

யாத்ரீகர்களை பதிவு செய்வதற்கும் வருகை தருவதற்கும் வரைவு தரநிலை இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மாநில அரசு முன்பு தயாரித்திருந்தது. எனினும் நிலைமையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்ததால் வரைவு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா அலை வேகமெடுக்க ஆரம்பித்த நிலையில், உத்தரகண்டில் நடந்த கும்பமேளா குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தீவிரம் மிக அதிக அளவில் உள்ளதால், உத்தரகண்ட் அரசு சார் தாம் யாத்திரைக்குத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 1’ஆம் தேதி 2,236 எனும் அளவில் இருந்த நிலையில் நேற்று, 45,383’ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்