கொரோனாவுக்கு எதிரான போரில் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் முன்முயற்சிகள் தொடர்பில் இராணுவத் தளபதியுடன் மோடி ஆலோசனை..!

Date:

பிரதமர் நரேந்திர மோடி இன்று இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனேவுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் முன்முயற்சிகளை ஆய்வு செய்தார்.

இராணுவத்தின் மருத்துவ ஊழியர்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு கிடைக்கப் பெறுவதாக நாரவனே பிரதமருக்குத் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து வருவதாகவும் அவர் பிரதமருக்கு விளக்கினார்.

ஜெனரல் எம்.எம்.நாரவனே பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கையில், இராணுவம் தனது மருத்துவமனைகளை குடிமக்களுக்காக முடிந்தவரை திறக்கிறது என்றும் குடிமக்கள் தங்கள் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சைக்காக அணுகலாம் என்றும் அவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் அவற்றை நிர்வகிக்க சிறப்புத் திறன்கள் தேவைப்படும் வாகனங்களுக்கு மனிதவளத்துடன் இராணுவம் உதவுகிறது என்றும் ஜெனரல் எம்.எம்.நாரவனே பிரதமருக்கு தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் அதன் வளங்களை முழுமையாக பயன்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் தினசரி சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களில் தினசரி 3,00,000’க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வருகிறது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்