கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள்!

Date:

கொடிகாமம் நகரத்தில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று எழுமாற்றான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் கொடிகாமம் சந்தை, அதை அண்டிய கடைகளில் குறைநதளவானவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அதில் இருவர் கொடிகாமம் சந்தை வியாபாரிகள். இருவர் அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர்கள்.

குறைந்தளவானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து சுகாதார பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாளை, சந்தை மற்றும் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்