26.4 C
Jaffna
March 29, 2024
இந்தியா

இந்துக்களின் சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி ரத்து.;உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையை இடைநிறுத்த உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு கோவில்களின் பூசாரிகள் மட்டுமே சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் கூறினார். இந்த யாத்திரை மே 14 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு யாத்திரை செல்லும் நிகழ்வாகும்.இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ளன.

யாத்ரீகர்களை பதிவு செய்வதற்கும் வருகை தருவதற்கும் வரைவு தரநிலை இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மாநில அரசு முன்பு தயாரித்திருந்தது. எனினும் நிலைமையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்ததால் வரைவு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா அலை வேகமெடுக்க ஆரம்பித்த நிலையில், உத்தரகண்டில் நடந்த கும்பமேளா குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தீவிரம் மிக அதிக அளவில் உள்ளதால், உத்தரகண்ட் அரசு சார் தாம் யாத்திரைக்குத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 1’ஆம் தேதி 2,236 எனும் அளவில் இருந்த நிலையில் நேற்று, 45,383’ஆக உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment